தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்

மாவீரர்கள் கனவு ஒரு நாள் நனவாகும் எம் தேசம் விடிவு பெற்று சுதந்திர தாகத்தை அடையும்……..

Velupillai Prabhakaran

View original post

பிரபாகரம் மறையாது அது அகிலம் எங்கும் வியாபிக்கும் !

அழியாச்சுடர்கள்

leader prabakaran tribute

ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!

தனது வாழ்க்கையின் ஏறத்தாழ 4 தசாப்தங்களை போராட்ட வாழ்க்கைக்காக அர்ப்பணித்தவருக்கு, தனது மனைவி 3 பிள்ளைகள் உட்பட தனது முழுக் குடும்பத்தையே தமிழீழ விடுதலை இலட்சியத்துக்காக ஈகம் செய்தவருக்கு, ஈழத் தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன?

… மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மரணம் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அந்த மரணம் ஈழத் தமிழனத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்து தான் அதை நாம் நோக்க வேண்டும்… இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்…”

“31 May 2009.Velupillai Prabhakaran rebelled with great force against those who stole his people’s freedom. In him, something of the honour and dignity of an entire people, an entire nation…

View original post 349 more words

தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..?

அழியாச்சுடர்கள்

praba-godதாயிலாப்பிள்ளை யானோம்

விடுதலை தந்த மூச்சே என்
வியாபகப்பொருளே
உன்னைப் பாடக்கூட முடியவில்லை
உனக்காய் பாமாலை சூட்டியவன்
உனக்கு பூமாலை சூட முடியாமல்
தவிக்கின்றேன்?

இறைவன் என்கிறார்/நீ
மனிதன் என்கிறார் /இல்லை
முற்றும் துறந்த முனிவன் என்கிறார்
அதனால் உனக்கு….
வழிபாடு தேவை இல்லை
என்கிறார்
அய்யன் அய்யனே
பூசைக்கு வராதா திருவே
உருவம் நீ
வீதிக்கு வராத உருவே
வதனம் நீ
ஆசைக்குக் கூட உன்னை
அழகுத் தேரில் அழைத்து,
வரமுடியவில்லை
என் காவல்தெய்வம்
கரிகாலச் சோழனை
ஆரத்தழுவி
அழக்கூட முடியவில்லை

உலகத்தமிழினமே
உணக்கு ஒரு மடலென்று
உரக்கச் சொல்லியதால்
உரலில் கட்டி
வாய்கட்டி அடைக்கப்பட்டேன்
வரலாற்றுத் தவறை ஏன்?
செய்தீர் என்று
வாய்மை கொண்டதற்காகவே
வாங்கியவன் துரோகிப்பட்டம்.

அய்யன்,அய்யனே
நீயே என் உயிரானாய்
நீயே என் உணர்வானாய்
தாங்க முடியவில்லை?

தங்கவண்ண மேனியும்
புன்னகை தாங்கும் இன்ப வதனமும்
கண்களில் வீரப் போர்புலிப்பார்வையும்
புவனம் யாவையும் தன்வயமாக்கிடிம்
எங்களின் கோமகா
தமிழ்க்குலக்காவலா
தமிழீழ நாட்டின் மேதகு தலைவா
மொட்டவிழாப் பயிராயிருக்கும் போதே
சுட்டெரிப்பேன் பகையை என்று
சுடர்முகம் தூக்கி நின்ற
குலவிளக்கே / உன்
கட்டவிழா மேனிதன்னைக்
கரம்தொட்டுத்தடவியாடக்
காத்திருந்தோம்
கண்விழித்தோம்
முடியவில்லை

அய்யனே
நான் அழவில்லை ,
இரத்தம் அழுதது
போவது நிச்சயம் ,
முன்போ பின்போ
ஆயினும் அழுகை
அதன் பேர் பாசம்
வாழ்க்கை மரணம்
நடுவில் தடைச்சுவர்
எனக்கு எல்லாம்
இவனென்று இருந்தேன்,
நாதியற்றேன் அப்பொழுதே..

View original post 645 more words

வீரவணக்கம்: ஆவணி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்

அழியாச்சுடர்கள்

ltte veeravanakam 2

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

ஆவணி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

****

August 2nd

August 3rd

August 4th

August 4th

August 6th

August 9th

August 11th

August 12th

August 14th

August 15th

August 16th

August 17th

August 18th

August…

View original post 94 more words

பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்கள் 1,2

அழியாச்சுடர்கள்

palali map

யாழ் மாவட்ட வரைபடம்

பலாலி விமானத்தளத் தாக்குதலின் நோக்கம்….

பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -1

BT3

என்பது யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் நடத்திய முதலாவது தாக்குதலைக் குறிக்கும்.

பின்னணி : 1993 நவம்பரில், ‘தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர்.

அந்த நேரத்தில் திசைதிருப்பலுக்காகவும் படையினரின் வழங்கலை முடக்குவதற்காகவும் பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.

அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல்.

தாக்குதல் : இத்தாக்குதலுக்கென முப்பது வரையான வீரர்களைக் கொண்ட அணி கடல்வழியாக நகர்ந்தது.

கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அணி இரண்டாகப் பிரிந்து தளத்தினுள் ஊடுருவியது.

இலக்கை அடைய முன்பே எதிரியினால் இனங்காணப்பட்டு அவ்வணிகள் தாக்குதலுக்கு உள்ளாயின.

எதிர்பார்த்தபடி எதுவுமே நடைபெறாமல்போக, தப்பியவர்கள் தளம் திரும்பினர். இத்திட்டம் புலிகளுக்கு முற்றுமுழுதான தோல்வியாக முடிவடைந்தது.

இத்தாக்குதலில் புயலாக வீசிய 13 தேசத்தின்புயல்கள் …

கரும்புலி மேஜர் கலையழகன்

கரும்புலி மேஜர் தொண்டமான்

கரும்புலி கப்டன் சிவலோகன்

கரும்புலி கப்டன் கரிகாலன்

கரும்புலி கப்டன் சீராளன்

கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி

கரும்புலி கப்டன் மதிநிலவன்

கரும்புலி கப்டன் ஐயனார்

கரும்புலி லெப் நல்லதம்பி

கரும்புலி லெப் கண்ணன்

கரும்புலி லெப் ஜீவரஞ்சன்

கரும்புலி லெப் செங்கண்ணன்

கரும்புலி லெப்…

View original post 219 more words

உலகத்தமிழரின் தலைவன் பிரபாகரன் இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன் !

அழியாச்சுடர்கள்

பிரபாகரன் இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன்! – வழக்கறிஞர் தடா சந்திரசேகர்!prabakaran god

தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்! ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தனியரசு அமைப்பது தான். தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்.

இந்த தீர்ப்பு விரைவில் உலகத்திற்குத் தெரியவரும் என்று கூறிய வழக்கறிஞர் தடா சந்திரசேகர், தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்.

மேலும், புதுமாத்தளன், ஆனந்தபுரம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்குச் சென்று போரினால் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் பொதுமக்கள் சிலரிடம் கேட்டேன் எங்கள் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்று. அவர்களில் பலர் இருக்கின்றார் என்று கூறினர். சிலர் மௌனமாக உள்ளனர்.

உலகத்தமிழரின் தலைவன் பிரபாகரன் இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன் என்றார்.

View original post

வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி

அழியாச்சுடர்கள்

ஒரு போராளியின் புனிதச்சுவடுகள்.

விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்குகப்பால்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம்.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ஒன்றைத்தவிர வேறு எவ்விதமான ஆசையும் எமது மாவீரர்களுக்கு இருந்ததில்லை.

இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் படிக்க வேண்டும் அதனுடாக விடுதலைப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் பற்றோடு வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் பெரு விருப்பாகும்.
வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன். ஜிம்கலி.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன்.ஜிம்கலி,பிறந்தது,வளர்ந்தது, வாழ்ந்தது , வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும்.

நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான்,விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப்பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நெஞ்சினில் விடுதலைநெருப்பை ஏந்தி,காலம் எமக்குத்தந்த வரலாற்றுத் தேசியத் தலைவன் ஆணையில் களமாடி, சிங்களத்தை சிதறடித்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் நினைவுகள் எமது நெஞ்சினில் அழியாது நிறைந்துள்ளது.இவற்றில் ஒருவரான கப்டன். ஜிம்கலி வரலாற்றில் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதி கிரானில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராளியாகதென்படுகின்றார்கிரான் தமிழன்னை இம் மாவீரர்களைப்பெற்றதிலிருந்து உயர்ந்த இடத்தில் வரலாற்றில் நிமிர்ந்து நிற்கின்றாள். இதனை இம் மாவீரர்கள் சார்பாக உறுதியாகக் குறிப்பிடமுடியும்.

தளம்பாது,தடம்புரளாது,நீண்ட விடுதலைப் போரட்டத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் அழியாத பதிவையும் விடுதலை வரலாறு…

View original post 960 more words

பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்!

அழியாச்சுடர்கள்

leader prabakaran tribute 4வரலாறு தந்த வல்லமை பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்”

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்

“பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா” சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது” “தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச் சுடரொளி” இந்த வரலாறு தந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் “இறைதத்துவம்”……..!

praba god

பிரபாகரம் – “உலகின் புதிய உயிரோடை”

தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு…

View original post 145 more words

பிரிகேடியர் பால்ராஜ் – ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்

அழியாச்சுடர்கள்


வானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது. வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம்;. போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத எவ்வித சச்சரவுகள் இல்லாத சமாதான உலகமே எம் அனைவருடைய கனவாகவும் இருக்கின்றது. ஆனால், அந்த உலகம் வருகின்ற வரை, நீதி வருகின்ற வரை, நீதிக்காக, மனித உரிமைகளுக்கான, மனித இருப்புக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்கிரமங்களை, ஆக்கிரமிப்புக்களைச் செய்தவர்களை நாங்கள் வாழ்த்துவதும் இல்லை. வணங்குவதும் இல்லை.

ஆனால், ஒடுக்கப்படுகின்ற மக்கள் இனத்தினுடைய இருப்பிற்காக, அவர்களினது வாழ்வாதார உரிமைகளுக்காக போராடுகின்றவர்களை, களம் நின்று தம்மையே ஆகுதி ஆக்குகின்றவர்களை மகத்தான வீரர்களாக நாம் பதிவு செய்கின்றோம். வரலாற்றில் வணங்கி வருகின்றோம்.

அவ்வகையில் தமிழ் கண்ட வரலாற்றில் படித்தறிந்த மாவீரர்கள் சிலர் இருகின்றார்கள். நாம் நமது காலத்தில் கண்ட அப்படியான வீரர்களில் முதலானவராக தளபதி பால்ராஜ் அவர்களை வரலாற்றில் உங்களோடு இணைந்து நானும் பதிவு செய்யத் தலைப்படுகிறேன்.

இவரைப்பற்றி சிங்கள இராணுவ வட்டத்திலேயே உலவுகின்ற பேசப்படுகின்ற இரண்டு அனுபவங்களை காது வழி கேட்டு அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் அவருடைய ஆளுமையினுடைய ஆழமான தன்மையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு பால்ராஜ் அவர்கள் மருத்துவ தேவைக்காக சிங்கப்ப+ர் சென்று திரும்பி வருகின்ற பொழுது கொழும்பு விமான நிலையத்திலே அவருக்கொரு…

View original post 1,692 more words